கோவையில் 3-வயது குழந்தைக்கு முதுகு தண்டுவட சிதைவு நோய்: உதவக் கோரி பெற்றோர் மனு!

முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதிப்படும் 3-வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான நிதியை அரசு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதிப்படும் 3-வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான நிதியை அரசு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

“குழந்தைக்கு உதவ நினைப்பவர்கள் 70925-58807 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் நிதி வழங்கலாம்” என்றார்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோமிலா. இந்த தம்பதியினருக்கு ஜேசன் என்ற 3-மாத ஆண் குழந்தை உள்ளது.



இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் உள்ளது. இதற்காக ரூ.16-கோடி மதிப்பிலான தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. இந்த சூழலில், அமெரிக்க மருந்து நிறுவனம் குலுக்கல் முறையில் இந்த குழந்தைக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை செலுத்தியது.

இதனிடையே குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு 9-லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, அறுவை சிகிச்சை செய்வதற்கான நிதியை கொடுத்து உதவுமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து குழந்தையின் தாய் ரோமிலா கூறுகையில், "எங்கள் குழந்தைக்கு மூச்சு குழாயில் பிரச்சனை இருப்பதால் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மருத்துவ செலவு ரூ.9 லட்சம் வரை ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு உதவிட வேண்டும் என்று அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசு மற்றும் பொது மக்கள் எங்களுக்கு உதவ முன்வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...