தீபாவளி பண்டிகை: பாதுகாப்பான முறையில் செயல்பட காவல்துறை அறிவுரை.!!

தீபாவளியையொட்டி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கவும், பட்டாசுகளை விற்பனை செய்திடவும் கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: தீபாவளியையொட்டி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கவும், பட்டாசுகளை விற்பனை செய்திடவும் கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

1. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பது என்பது முழுமையாகத் தடைசெய்யப்படவில்லை.

2. உச்ச நீதிமன்றத்தால் 31.07.2021 அன்று கொடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவுப்படி, ஆண்டிமணி, லித்தியம், மெர்குரி, ஆர்செனிக் காரீயம் மற்றும் பேரியம் உப்புக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

3. பசுமை பட்டாசுகள் தான் விற்பனை செய்ய வேண்டும் மற்றும் வெடிக்கப்பட வேண்டும்.

4. சரவெடிகள் விற்பனை செய்வதும், வெடிப்பதும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

5. Petroleum and Explosives Safety Organization (PESO) ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒலியை எழுப்பக்கூடிய பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் மற்றும் PESO வால் அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்துகள் அடங்கிய பட்டாசுகள் மாத்திரமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

6. அமைதியான பகுதிகள் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக மருத்துவமனைகள் நர்சிங் ஹோம்ல், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், கோவில் வளாகங்கள் மற்றும் எவையெல்லாம் அமைதிப்பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் இருந்து குறைந்த பட்சம் 100 மீட்டருக்கும் பட்டாக வெடிப்பது கூடாது.

7. தீபாவளி பண்டிகை நாட்களில் அல்லது பொதுவாக வெடித்து கொண்டாடப்படும் வேறு எந்த பண்புகையின் போதும் கண்டிப்பாக இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

8. பட்டாசுகள் விற்பனையானது உரிமம் வழங்கப்பட்ட விற்பனையாளர்களால் மட்டுமே விற்கப்பட வோண்டும்.

9. உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்திரவுகளை மீறி தன்னிச்சையாக கீழ்படியாமல் நடந்து கொள்பவர்கள் மீது தக்க குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

10. பட்டாசு கடைகளில் வெடிப்பொருட்கள் இருப்பு வைக்கப்படும் இடங்களிலும் மற்றும் விற்பனை இடங்களிலும் போதுமான அளவில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் ஆகியவற்றை விற்பனையாளர்கள் காட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...