தெலுங்கானாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கோவை: தமிழகத்தில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விவசாயம் சார்ந்த பாடம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-
"விவசாயிகள் பயன்படுத்தும் விதைகள், உணவு தானியங்கள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதைகள், பண்ணை விவசாயம் குறித்து பாடங்கள் நடத்தப்பட வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு தெலுங்கானாவில் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இதுபோல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-
"விவசாயிகள் பயன்படுத்தும் விதைகள், உணவு தானியங்கள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதைகள், பண்ணை விவசாயம் குறித்து பாடங்கள் நடத்தப்பட வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு தெலுங்கானாவில் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இதுபோல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.