கோவையில் பேருந்தில் வைத்திருந்த கலெக்ஷன் பணத்தை திருட முயன்ற வாலிபர் கைது..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த முகம்மது மஜீத் என்ற வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் பேருந்தில் வைத்திருந்த கலெக்ஷன் பணத்தை திருட முயன்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலுசாமி (45). இவர் கோவையில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு பேருந்து பயணிகள் செலுத்திய பயண கட்டண கலெக்சன் பணத்தை பேருந்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு உறங்கச் சென்றார்.

இந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பணம் வைத்திருந்த பெட்டியை உடைத்து பணத்தை திருட முயற்சித்த சத்தம் கேட்டு டிரைவர் பாலுசாமி எழுந்தார். உடனே அவர் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து காட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் முகம்மது மஜீத் (21) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...