கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த முகம்மது மஜீத் என்ற வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் பேருந்தில் வைத்திருந்த கலெக்ஷன் பணத்தை திருட முயன்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலுசாமி (45). இவர் கோவையில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பேருந்து பயணிகள் செலுத்திய பயண கட்டண கலெக்சன் பணத்தை பேருந்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு உறங்கச் சென்றார்.
இந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பணம் வைத்திருந்த பெட்டியை உடைத்து பணத்தை திருட முயற்சித்த சத்தம் கேட்டு டிரைவர் பாலுசாமி எழுந்தார். உடனே அவர் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து காட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் முகம்மது மஜீத் (21) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலுசாமி (45). இவர் கோவையில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பேருந்து பயணிகள் செலுத்திய பயண கட்டண கலெக்சன் பணத்தை பேருந்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு உறங்கச் சென்றார்.
இந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பணம் வைத்திருந்த பெட்டியை உடைத்து பணத்தை திருட முயற்சித்த சத்தம் கேட்டு டிரைவர் பாலுசாமி எழுந்தார். உடனே அவர் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து காட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் முகம்மது மஜீத் (21) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.