கோவையில் 97.3-சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி.!!

கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். அதிகளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 38-லட்சத்து 67-ஆயிரத்து 296-போ் உள்ளனர். இவர்களில் 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் 27-லட்சத்து 90-ஆயிரத்து 400-போ் உள்ளனர். இதில் 27-லட்சத்து 16-ஆயிரத்து 992- போ் (97.3 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

12-லட்சத்து 4-ஆயிரத்து 524-போ் (43.1 சதவீதம்) 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 2-ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்களின் கைப்பேசி எண்ணுக்கு அழைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

விரைவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 99-சதவீதமாக உயரும் என்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...