கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். அதிகளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 38-லட்சத்து 67-ஆயிரத்து 296-போ் உள்ளனர். இவர்களில் 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் 27-லட்சத்து 90-ஆயிரத்து 400-போ் உள்ளனர். இதில் 27-லட்சத்து 16-ஆயிரத்து 992- போ் (97.3 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
12-லட்சத்து 4-ஆயிரத்து 524-போ் (43.1 சதவீதம்) 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 2-ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்களின் கைப்பேசி எண்ணுக்கு அழைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
விரைவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 99-சதவீதமாக உயரும் என்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். அதிகளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 38-லட்சத்து 67-ஆயிரத்து 296-போ் உள்ளனர். இவர்களில் 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் 27-லட்சத்து 90-ஆயிரத்து 400-போ் உள்ளனர். இதில் 27-லட்சத்து 16-ஆயிரத்து 992- போ் (97.3 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
12-லட்சத்து 4-ஆயிரத்து 524-போ் (43.1 சதவீதம்) 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 2-ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்களின் கைப்பேசி எண்ணுக்கு அழைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
விரைவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 99-சதவீதமாக உயரும் என்றனர்.