தினசரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என அச்சமடைந்துள்ளனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகில் பட்டாசுக் கடை அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மாநகரின் மத்தியில் இருப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். தினசரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
இதனிடையே, சந்தைக்கு அருகிலேயே பட்டாசுக் கடை போடப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
"இதுவரை உழவர் சந்தை அருகில் பட்டாசுக்கடை அமைக்கப்பட்டது இல்லை. தற்போது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, உரிமம் பெற்று உழவர் சந்தை அருகிலேயே கடை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது" என்று தெரிவித்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மாநகரின் மத்தியில் இருப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். தினசரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
இதனிடையே, சந்தைக்கு அருகிலேயே பட்டாசுக் கடை போடப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
"இதுவரை உழவர் சந்தை அருகில் பட்டாசுக்கடை அமைக்கப்பட்டது இல்லை. தற்போது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, உரிமம் பெற்று உழவர் சந்தை அருகிலேயே கடை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது" என்று தெரிவித்தனர்.