கோவை ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை அருகே பட்டாசுக் கடை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு..!

தினசரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என அச்சமடைந்துள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகில் பட்டாசுக் கடை அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மாநகரின் மத்தியில் இருப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். தினசரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.

இதனிடையே, சந்தைக்கு அருகிலேயே பட்டாசுக் கடை போடப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

"இதுவரை உழவர் சந்தை அருகில் பட்டாசுக்கடை அமைக்கப்பட்டது இல்லை. தற்போது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, உரிமம் பெற்று உழவர் சந்தை அருகிலேயே கடை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது" என்று தெரிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...