கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!! 18 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு..!

இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022 ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.



கோவை: கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் 18 ஆயிரத்து 13 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் 15,19,419 ஆண் வாக்காளர்களும், 15,64,628 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 518 என மொத்தம் 30,84,565 வாக்காளர்கள் உள்ளனர்.



புதிதாக 8,798 ஆண் வாக்காளர்களும், 9,116 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், 15,476 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் பார்வையிடலாம். இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022 ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் இம்மாதம் 30-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். இந்த மாதம் 13, 14, 27 மற்றும் 28-ந் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பதிவு நீக்கம் செய்ய படிவம் 7, ஏற்கனவே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 8ஏ படிவம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மனுக்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...