பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பொள்ளாச்சி உடுமலை சாலை அருகில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14- வயது சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாரிமுத்து மகன் மகரஜோதி (31) உட்பட 5- பேரின் மீது புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5- பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு சம்பந்தமாகக் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களுக்குக் குண்டர் சட்டம் பிறப்பிக்கப் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் 5-பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கோவை மாவட்டத்தில் பாலியல் கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...