"வைத்யா" என்னும் மருத்துவ மென்பொருள் உருவாக்கி பிஎஸ்ஜி மாணவர்கள் சாதனை


கோவை, பி.எஸ்.ஜி மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் "வைத்யா" என அழைக்கப்படும் மென்பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். வைத்யா என்ற இந்த மென்பொருள் ஆதார் கார்டுகளுடன் மருத்துவத் தகவல்களை இணைத்து எளிய மற்றும் பயன்படுத்துவதற்கு வசதியாக அடக்கமான மற்றும் நாடெங்கிலும் அணுகத்தக்க ஓர் அமைப்பு ஆகும்.



இது மருத்துவமனையை மட்டுமல்லாது பரிசோதனை கூடங்களையும், மருந்தகங்களையும் இணைக்கிறது. ஆதார் எண் இல்லாதவரும் இவ்வமைப்பை பயன்படுத்தி அதன் பயன்களை அடையலாம். எனவே, இதன் மூலம் நோயாளிகளையும் மருத்துவத்திற்காக பின்தொடர வழிவகுக்கிறது.

நாட்டின் முக்கிய மருத்துவ நிலையங்கள் கணினிமையம் ஆக்கப்பட்ட தகவல் நிர்வாகங்களை பயன்படுத்தி வருகிறது. எனினும் அந்த தகவல் நோயாளிகள் மற்றும் அந்த மருத்துவமனையையும் சார்ந்து இருக்கும். தற்போதுள்ள இந்த வசதி நோயாளிகளின் மருத்துவத் தகவல்களை பரிமாற்றம் செய்ய போதிய வசதிகள் இல்லை. எனவே, நோயாளி பற்றிய அனைத்து தகவல்களையும் எந்த இடத்திலிருந்தும் அணுகத்தக்கவாறு ஒரு அமைப்பு முறை தேவைப்படுகிறது.



இதற்கு ஆதார் எண்ணானது இவ்வமைப்பு முறையை நிர்வகிப்பதில் முக்கிய தீர்வாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் தனியாக அடையாளம் காட்டுவதற்கு வழிவகுக்கிறது. நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை ஆதாருடன் இணைப்பதால் அது நோயாளிகளின் பிரத்யேக மருத்துவத்திற்கு வழிவகுக்கிறது. 

இவை தவிர மத்திய அரசும் கணினி மயமாக்கப்பட்ட மருத்துவப்பதிவுகளை உருவாக்கி அதன் தரத்தினையும் வரையறைகளையும் நோயாளிகளின் ரகசியங்களை பாதுகாக்கும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. 

இந்த முறையினை பிஎஸ்ஜி மருத்துவ மற்றும் தொழிநுட்ப மாணவர்களான ரோஹந்தி ரவிகுலன், தயானந், காசிநாதன், பிரகாஷ், பிரகதீஸ் ஆகியோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...