பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டம்- சிஐடியு.!!

ஒன்றிய அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10-ம் தேதி பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.


கோவை: ஒன்றிய அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10 -ம் தேதி பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் கூறுகையில்,

ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை எதிர்த்து சிஐடியு அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் யாத்திரை, மாட்டு வண்டி பேரணி உள்ளிட்ட வடிவங்களில் தொடர்ந்து நடத்துவது.

தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து டிசம்பர் 10 -ம் தேதி பத்து நிமிடம் வாகனத்தை நிறுத்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இதில் அனைத்து அமைப்புகளையும் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம்.

டிசம்பர் 10-ம் தேதி காலை 12 -மணி முதல் 12.10 மணிவரை பத்து நிமிடங்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை வெற்றிகரமாக்கிட சிறுசிறு குழுக்களை அமைத்து அனைத்து பெட்ரோல் பங்குகள் மற்றும் டோல்கேட்டுகள், டிராபிக் சிக்னல்கள் என போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதர அமைப்புகளுடன் பேசி இப்போராட்டத்தை வலுவான போராட்டமாக முன்னெடுக்க இருக்கிறோம் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...