வால்பாறையில் கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது.!!

வால்பாறையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபரை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15-நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


வால்பாறை: வால்பாறையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜோராக நடைபெறுவதாக காவல்துறைக்குப் புகார் வந்துள்ளது. இதனையடுத்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவலர்கள் வால்பாறையில் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ளது குரங்கு முடி தேயிலைத் தோட்டம். இப்பகுதியில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப் படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் மற்றும் உதவி ஆய்வாளர் இளங்கோ குரங்கு முடி தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று ராஜாமணி என்பவரின் வீட்டைச் சோதனையிட்டனர்.

அங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப் பட்டிருந்த ஐம்பத்தி ஐந்து மதுபாட்டில்களை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜாமணியை வால்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் ராஜமணியை வால்பாறை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி உத்தரவின் பேரில் 15-நாள் நீதிமன்றக் காவலுக்கு ராஜாமணி அனுப்பி வைக்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...