தமிழக தலைமை செயலர் வீட்டில் சோதனையிட்டதற்கு ஏன் மம்தா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ? என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கேள்வி


தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததற்கு தமிழக முதல்வரும், எதிர்க் கட்சி தலைவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மம்தா ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க -வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசுகையில்,

தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஏன் வருமான வரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறை சோதனைகளை எதிர்ப்பவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்கள் தான் என தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சசிகலா-வை சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு!. இந்த அணுகுமுறை ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல என கூறினார். 

மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறது. தற்போது சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வாரணாசியில் பிரதமர் மோடி பதிலளித்துவிட்டதாக கூறினார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...