கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (84), விவசாயியான இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 26ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த முத்துக்குமாரசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து, வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த முத்துக்குமாரசாமியை மீட்டு அக்கம்பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த முத்துக்குமாரசாமியின் மகன் ரவிக்குமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.