கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக சர்வே பணிகள் தீவிரம்..!

கோவையில் 144 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாட்டிலைட் உதவியுடன் சர்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை: கோவையில் 144 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சர்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கணியூர் முதல் உக்கடம் வரை 26 கி.மீ. தூரத்திற்கும், பிளிச்சி முதல் உக்கடம் வரை 24 கி.மீ. தூரத்திற்கும், கணேசபுரம், காருண்யா நகர் முதல் உக்கடம் வரை 44 கி.மீ. தூரத்திற்கும், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் முதல் உக்கடம் பேருந்து நிலையம் வரை 8 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தமாக 144 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கும் வகையில் சர்வே பணி நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அவினாசி சாலை வழிகள், பெரியகடை வீதி, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சர்வே பணிகள் சாட்டிலைட் உதவியுடன் அண்மையில் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து, கோவையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக சர்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை நகரில் 136 கி.மீ. தூரம் மட்டுமே மெட்ரோ ரயில் சேவைக்காகத் திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இணைப்பு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்வே பணிகள் முடிந்ததும் முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...