வால்பாறையில் சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமையால் வாகன ஓட்டிகள் அச்சம்..!!

காட்டெருமையால் சேதமோ, உயிரிழப்போ ஏற்படும் முன்பு உடனடியாக அந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த சோலையாறு அணையிலிருந்து பவர் வுஸ் செல்லும் பிரதான சாலையில் மிகவும் வயதான காட்டெருமை ஒன்று கடந்த இரண்டு தினங்களாக சாலையில் படுத்து உள்ளது. 

இதன் காரணமாக அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், காட்டெருமை தங்களை தாக்கிவிடுமோ என்று மிகுந்த அச்சத்திலேயே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். தொடர்ந்து காட்டெருமை அப்பகுதியிலேயே இருப்பதால் பொதுமக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. 

காட்டெருமை மிகுந்த வயதான காரணத்தினால் நோய்வாய்ப்பட்டு அப்பகுதியில் தங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காட்டெருமையால் சேதமோ, உயிரிழப்போ நடப்பதற்கு முன் வனத்துறையினர் உடனடியாக அந்த காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தது அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...