திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,100-கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,100-கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
புகாரின் அடிப்படையில் முருகம்பாளையம் பகுதியில் நேற்று இரவு சோதனை ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் குமார், திருப்பூர் தெற்கு தனி வருவாய் ஆய்வாளர் ரஜா மற்றும் திருப்பூர் தெற்கு தனி வட்டாட்சியர் பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி அருகே மாவு அரைத்துக் கொடுக்கப்படும் ஒரு கடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் கடை நடத்தி வந்த கார்த்திக் (வயது 35) என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் ரேஷன் அரிசி 15 மூட்டை அதாவது சுமார் 1500 கிலோ அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கார்த்திக் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
புகாரின் அடிப்படையில் முருகம்பாளையம் பகுதியில் நேற்று இரவு சோதனை ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் குமார், திருப்பூர் தெற்கு தனி வருவாய் ஆய்வாளர் ரஜா மற்றும் திருப்பூர் தெற்கு தனி வட்டாட்சியர் பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி அருகே மாவு அரைத்துக் கொடுக்கப்படும் ஒரு கடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் கடை நடத்தி வந்த கார்த்திக் (வயது 35) என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் ரேஷன் அரிசி 15 மூட்டை அதாவது சுமார் 1500 கிலோ அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கார்த்திக் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.