பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் பங்க் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் படத்திற்கு மலர் தூவி தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரோனா ஏற்படும் வகையில் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட 16-பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே விதிமுறையை மீறி தீபாவளி போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட 14-பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் பங்க் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் படத்திற்கு மலர் தூவி தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரோனா ஏற்படும் வகையில் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட 16-பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே விதிமுறையை மீறி தீபாவளி போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட 14-பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.