கோவையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கம் ஒன்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் நான்கு மாவட்டத்தின் ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேர்தல் பயிற்சி, மற்றும் ஆயத்த பணிகள் குறித்த தெளிவுரை வழங்கப்பட்டது.

அக்கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஒரு வாரக் காலமாகத் தேர்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும், தேர்தலுக்காகப் பல முன்னெர்ப்பாடுகள் செய்ய வேண்டிய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மின்னணு எந்திரங்களைக் கொண்டு இந்த தேர்தலைச் சந்திக்க உள்ளதாகவும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சட்ட விதிகளைத் தெரிந்து கொண்டால் தேர்தல் நடத்துவது மிக எளிதாக இருக்கும் என்றும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் உட்பட மாநகராட்சி ஆணையர், கோவை மாவட்ட மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கம் ஒன்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் நான்கு மாவட்டத்தின் ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேர்தல் பயிற்சி, மற்றும் ஆயத்த பணிகள் குறித்த தெளிவுரை வழங்கப்பட்டது.
அக்கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஒரு வாரக் காலமாகத் தேர்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும், தேர்தலுக்காகப் பல முன்னெர்ப்பாடுகள் செய்ய வேண்டிய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மின்னணு எந்திரங்களைக் கொண்டு இந்த தேர்தலைச் சந்திக்க உள்ளதாகவும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சட்ட விதிகளைத் தெரிந்து கொண்டால் தேர்தல் நடத்துவது மிக எளிதாக இருக்கும் என்றும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் உட்பட மாநகராட்சி ஆணையர், கோவை மாவட்ட மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.