தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தாராபுரத்தில் மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1-கோடியே 62-லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்: தாராபுரத்தில் மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1-கோடியே 62-லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னாழி பாளையத்தில் அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான 13-ஏக்கர் புஞ்சை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் மேனகா மற்றும் உதவி ஆணையர் திருப்பூர் சதீஷ், செயல் அலுவலர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்டனர். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னாழி பாளையத்தில் அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான 13-ஏக்கர் புஞ்சை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் மேனகா மற்றும் உதவி ஆணையர் திருப்பூர் சதீஷ், செயல் அலுவலர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்டனர். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.