கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5-நாள் போலீஸ் காவல்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க 5-நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.



கோவை: நீலகிரி உதகை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீலகிரி உதகை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் ரமேஷ் இவர்கள் இருவர் மீதும் 201,211,404. பிரிவுகளின் கீழ் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை காவல்துறை சேலத்தில் வைத்து கைது செய்தனர்.

அதன்பிறகு இவர்களைக் கூடலூர் சிறையில் அடைத்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் தங்களது சிறைக்காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று கனகராஜின் சகோதரர் தனபால் தற்போது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா கனகராஜின் சகோதரர் தனபாலை காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க 5 -நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...