கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க 5-நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.
கோவை: நீலகிரி உதகை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீலகிரி உதகை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் ரமேஷ் இவர்கள் இருவர் மீதும் 201,211,404. பிரிவுகளின் கீழ் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை காவல்துறை சேலத்தில் வைத்து கைது செய்தனர்.
அதன்பிறகு இவர்களைக் கூடலூர் சிறையில் அடைத்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் தங்களது சிறைக்காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கனகராஜின் சகோதரர் தனபால் தற்போது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா கனகராஜின் சகோதரர் தனபாலை காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க 5 -நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.