விமான பயணியிடம் ரூ. 53 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்- வருமான வரித்துறையினர் விசாரணை


டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கென்ய இளைஞரிடமிருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்தில் கணக்கில் வராத புதிய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு வரப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது கென்யா நாட்டை சேர்ந்த கொகுகோ சிஜியோகி சுவெல்டா என்ற பயணியிடம் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உரிய பதிலளிக்காததால் அவரை வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுவெல்டாவிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ள வருமானத்த்துறையினர் இந்த பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...