கோவையில் காவலரை தாக்கி செல்போன் பறித்தவர் கைது.!!

கோவையில், ரோந்து சென்ற போலீஸ்காரரை தாக்கி செல்போன், பறித்த ரவுடியை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில், ரோந்து சென்ற போலீஸ்காரரை தாக்கி செல்போன், பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

போத்தனூர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருபவர் ஸ்ரீராம். இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தங்கள் பகுதியில் சிலர் மது போதையில் அமர்ந்து இருந்தனர்.

அங்கு அருகில் சென்று பார்த்த போது மதுபோதையிலிருந்த நபர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அபுதாஹிர் சட்டவிரோதமான செயல்கள் பலவற்றில் ஈடுபட்டு ஏற்கனவே சிறைக்குச் சென்றவர் என்பது ஸ்ரீராமுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்ரீராம் அபுதாஹிர் மற்றும் அவருடன் இருந்தவர்களை செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றார். அப்பொழுது அபுதாஹீர் கான்ஸ்டபிள் ஸ்ரீராம் கையிலிருந்த செல்போனை பறித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீராம் கண்ட்ரோல் ரூம்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்குக் காவல் துறையினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீராம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...