திருப்பூயில் ஓடும் காரில் கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்து விபத்து: அதிர்ஷ்டத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர்.!!

திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிர வைக்கும் இந்த சம்பவத்தின்போது நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.


ஈரோடு: திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிர வைக்கும் இந்த சம்பவத்தின்போது நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் இன்று காலை திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள பனியன்நிறுவனத்தில் துணிகளைத் தைக்க ஆர்டர் கொடுத்து விட்டு காரில் நம்பியூருக்கு புறப்பட்டார்.

திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் சாலையோரம் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கித் தப்பினார். பின்னர் சிறிது நேரத்தில் கார் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்தது. காரில் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

மேலும் இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. காரில் தீப்பிடித்தது எப்படி என்று தெரியவில்லை. இது குறித்து திருமுருகன் பூண்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...