திருப்பூயில் ஓடும் காரில் கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்து விபத்து: அதிர்ஷ்டத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர்.!!

திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிர வைக்கும் இந்த சம்பவத்தின்போது நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.


ஈரோடு: திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிர வைக்கும் இந்த சம்பவத்தின்போது நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் இன்று காலை திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள பனியன்நிறுவனத்தில் துணிகளைத் தைக்க ஆர்டர் கொடுத்து விட்டு காரில் நம்பியூருக்கு புறப்பட்டார்.

திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் சாலையோரம் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கித் தப்பினார். பின்னர் சிறிது நேரத்தில் கார் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்தது. காரில் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

மேலும் இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. காரில் தீப்பிடித்தது எப்படி என்று தெரியவில்லை. இது குறித்து திருமுருகன் பூண்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...