புதிய ரூபாய் நோட்டுகள் அதிகளவில் பிடிபடுவது பிரதமர் மோடிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழிசை சௌந்திரராஜன் தகவல்


புதிய ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் பிடிபடுவது பிரதமர் மோடிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனை அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க மாற்று சக்தியாக உருவெடுத்து வருவதாகவும், நேர்மறையான அரசியலின் மூலம் வருங்காலத்தில் மிகப்பெரும் வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் புறவாசல் வழியாகவோ, இன்னொரு கட்சியை உடைத்தோ, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியோ ஆட்சியை பிடிப்பதில் பாஜகவிற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தார். 

வருமான வரித்துறை அதிகாரிகள் பணநடமாட்டம் உள்ள இடத்திலும், அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக சந்தேகப்படும் இடங்களில் தான் சோதனை நடத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கைகளில் மத்திய அரசின் தாக்கம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார். 

பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதால்தான், மக்கள் தெருவில் நிற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது சுமத்தியுள்ள ஊழல் புகார் என்பது ஏற்கனவே உச்சநீதிமன்றத்தினால் புறந்தள்ளப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற புகார் என கூறிய அவர், ராகுல்காந்தியை பார்த்தால் பூகம்பம் வருகிறதோ இல்லையோ, சிரிப்பு தான் வருகிறது என தெரிவித்தார்.

அதிகளவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் பிடிபடுவதை கண்டு பிரதமர் மோடியே ஆச்சரியப்படுகிறார் எனவும், பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் ஊழல் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் போது மக்கள் விரும்பும் மாற்றம் வருமென தெரிவித்தார். 

பண்பாட்டுடன் கூடிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டுமென்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவான, வலிமையான வாதங்களை முன்வைத்து இருப்பதாகவும் அவர் கூறினார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போராட்டங்கள் நடத்துவதினால் எந்த தீர்வும் வராது எனவும், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...