கிணத்துக்கடவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் - மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பங்கேற்பு!

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொறுப்பாளர் கனகராஜ் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


கோவை: கிணத்துக்கடவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பங்கேற்றார்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தயாராகி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவில் ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொறுப்பாளர் கனகராஜ் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பேசியதாவது:-



நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், இதேபோல் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று ஒற்றுமையுடன் செயலாற்றி நகரப்புற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கதிர்வேல், மார்க்கெட் சின்னு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்தி சரண்யா உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...