கிணத்துக்கடவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் - மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பங்கேற்பு!

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொறுப்பாளர் கனகராஜ் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


கோவை: கிணத்துக்கடவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பங்கேற்றார்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தயாராகி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவில் ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொறுப்பாளர் கனகராஜ் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பேசியதாவது:-



நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், இதேபோல் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று ஒற்றுமையுடன் செயலாற்றி நகரப்புற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கதிர்வேல், மார்க்கெட் சின்னு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்தி சரண்யா உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...