கோவை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது..!

கைது செய்யப்பட்ட கோவிந்தன் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22). இவர் நேற்று காலை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி குமார் பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

பின்னர், இதுகுறித்து ஆகாஷ் குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்கிற சரவணன் (34) என்பவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கோவிந்தன் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...