நொய்யல் வழித்தடத்தில் உள்ள குறிச்சி, சிங்காநல்லூர், உக்கடம், கோலரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, உள்ளிட்ட 14 குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
கோவை: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், நொய்யல் வழித்தடத்தில் உள்ள 14 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் இறுதி கட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மழைப்பொழிவு இருந்தது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து நொய்யல் வழித்தடத்தில் உள்ள, 25 குளங்களுக்கு நீரை திருப்பி விடும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
இதனால், நொய்யல் வழித்தடத்தில் உள்ள குறிச்சி, சிங்காநல்லூர், உக்கடம், கோலரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி செல்வசிந்தாமணி உள்ளிட்ட 14 குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மற்ற குளங்களும் விரைவில் நிரம்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் இறுதி கட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மழைப்பொழிவு இருந்தது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து நொய்யல் வழித்தடத்தில் உள்ள, 25 குளங்களுக்கு நீரை திருப்பி விடும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
இதனால், நொய்யல் வழித்தடத்தில் உள்ள குறிச்சி, சிங்காநல்லூர், உக்கடம், கோலரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி செல்வசிந்தாமணி உள்ளிட்ட 14 குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மற்ற குளங்களும் விரைவில் நிரம்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.