மேலும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கோவை: ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு கிராம ஊராட்சிக் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:-
ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், பணிக்கொடை ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவை வேண்டும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், அரசு அறிவித்த எந்த சலுகைகளும் தங்களுக்கு சரிவர வந்து சேர்வதில்லை என்று குற்றம்சாட்டினர். ஊதியக்குழு உத்தரவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்றனர்.

மேலும், இது குறித்து புகார்கள் தொடர்ந்து கொடுத்த நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு கிராம ஊராட்சிக் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:-
ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், பணிக்கொடை ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவை வேண்டும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும், அரசு அறிவித்த எந்த சலுகைகளும் தங்களுக்கு சரிவர வந்து சேர்வதில்லை என்று குற்றம்சாட்டினர். ஊதியக்குழு உத்தரவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்றனர்.
மேலும், இது குறித்து புகார்கள் தொடர்ந்து கொடுத்த நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.