ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

மேலும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


கோவை: ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தமிழ்நாடு கிராம ஊராட்சிக் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:-

ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், பணிக்கொடை ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவை வேண்டும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.



மேலும், அரசு அறிவித்த எந்த சலுகைகளும் தங்களுக்கு சரிவர வந்து சேர்வதில்லை என்று குற்றம்சாட்டினர். ஊதியக்குழு உத்தரவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்றனர்.



மேலும், இது குறித்து புகார்கள் தொடர்ந்து கொடுத்த நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...