ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

மேலும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


கோவை: ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தமிழ்நாடு கிராம ஊராட்சிக் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:-

ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், பணிக்கொடை ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவை வேண்டும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.



மேலும், அரசு அறிவித்த எந்த சலுகைகளும் தங்களுக்கு சரிவர வந்து சேர்வதில்லை என்று குற்றம்சாட்டினர். ஊதியக்குழு உத்தரவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்றனர்.



மேலும், இது குறித்து புகார்கள் தொடர்ந்து கொடுத்த நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...