கோவையில் 10 நிமிடங்கள் பெய்த கனமழை..! சாலையெங்கும் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், பீளமேடு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.



கோவை: தமிழகத்தில், 27ம் தேதி அன்று ஆறு மாவட்டங்களுக்கும், 28ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாளை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும் எனவும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவையில் ஒரு நாள் முன்னதாகவே கன மழை வெளுத்து வாங்கத் தொடங்கி உள்ளது. கோவை மாநகரை பொருத்தவரை ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், டவுன்ஹால், பீளமேடு, கோவை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.

மழையால், சாலை எங்கும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடி வருவதால், சாலையெங்கும் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...