கோவையில் 10 நிமிடங்கள் பெய்த கனமழை..! சாலையெங்கும் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், பீளமேடு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.



கோவை: தமிழகத்தில், 27ம் தேதி அன்று ஆறு மாவட்டங்களுக்கும், 28ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாளை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும் எனவும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவையில் ஒரு நாள் முன்னதாகவே கன மழை வெளுத்து வாங்கத் தொடங்கி உள்ளது. கோவை மாநகரை பொருத்தவரை ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், டவுன்ஹால், பீளமேடு, கோவை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.

மழையால், சாலை எங்கும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடி வருவதால், சாலையெங்கும் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...