கோவையில் ஆன்லைனில் வேலை தேடியவரிடம் கமிஷன் தருவதாக கூறி ரூ. 1.25 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அந்த இணையதளம் வழியாக நடைபெறும் பொருட்கள் விற்பனையில் அதிக அளவு கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.


கோவை: கோவையில் ஆன்லைனில் வேலை தேடியவருக்கு கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி ரூ. 1.25 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள சின்ன தடாகத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (28) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். இவர் பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்து இணையத்தில் வேலை தேடினார்.

அப்போது, ஒரு இணையத்திற்கு சென்று வேலை வாய்ப்புக்காக தனது பெயர், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், அவரது வாட்ஸ் - ஆப் எண்ணிற்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அந்த இணையதளம் வழியாக நடைபெறும் பொருட்கள் விற்பனையில் அதிக அளவு கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதனை நம்பிய அவர் அந்த இணையதளத்தில் குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலமாக ரூபாய் 5000, ரூபாய் 10,000 ரூபாய் 30,000 என பல்வேறு தவணைகளாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளார்.

இந்த நிலையில், அந்த இணையத்தில் கூறியபடி அவருக்கு கமிஷன் எதுவும் வரவில்லை. இதனால் அந்த இணையத்திலிருந்து தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த எண்ணில் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...