கோவையில் வரி வசூலில் 16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வணிக வரி வசூல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு..!

கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் வரி வசூலில் 16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வணிக வரி வசூல் ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாலசுந்தரம் ரோட்டில், உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் வரிவசூல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் செந்தில்குமார் (56). பொள்ளாச்சி சேரன் நகரைச் சேர்ந்த இவரிடம் கோவை கணபதி பகுதியில் வணிக வரி வசூலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை இவர் அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 15 ஆயிரத்தை செலுத்தாமல் செந்தில்குமார் மோசடி செய்தது அலுவலக ஆய்வில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், செந்தில்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு வணிகவரி துறை உதவி ஆணையாளர் பிரபு கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

இதன் பெயரில் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...