கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் வரி வசூலில் 16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வணிக வரி வசூல் ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாலசுந்தரம் ரோட்டில், உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் வரிவசூல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் செந்தில்குமார் (56). பொள்ளாச்சி சேரன் நகரைச் சேர்ந்த இவரிடம் கோவை கணபதி பகுதியில் வணிக வரி வசூலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை இவர் அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 15 ஆயிரத்தை செலுத்தாமல் செந்தில்குமார் மோசடி செய்தது அலுவலக ஆய்வில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், செந்தில்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு வணிகவரி துறை உதவி ஆணையாளர் பிரபு கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.
இதன் பெயரில் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.