பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..!

ஆழியார் அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்ட போது வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்ட போது, வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், அப்பர் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்தும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் முழு கொள்ளளவை எட்டி இருந்த ஆழியார் அணையில் இருந்து, அவ்வப்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மாலை மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆழியார் அணையில் இருந்து மதகுகள் வழியாக 2,265 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதனிடையே, ஆழியார் அணையை ஒட்டியுள்ள தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இருவர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இருவரும் வெள்ளத்தின் நடுவே பாறை ஒன்றில் நின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருவரின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உதவியோடு, ஆழியார் நகர் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் ஆற்று வெள்ளத்தில் இறங்கி, இருவரையும் பாதுகாப்பாக மீட்டார்.

இந்த நிலையில், ஆழியாறு தடுப்பணையில் ஆற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிக்கும் வீடியோ, வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...