பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..!

ஆழியார் அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்ட போது வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்ட போது, வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், அப்பர் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்தும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் முழு கொள்ளளவை எட்டி இருந்த ஆழியார் அணையில் இருந்து, அவ்வப்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மாலை மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆழியார் அணையில் இருந்து மதகுகள் வழியாக 2,265 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதனிடையே, ஆழியார் அணையை ஒட்டியுள்ள தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இருவர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இருவரும் வெள்ளத்தின் நடுவே பாறை ஒன்றில் நின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருவரின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உதவியோடு, ஆழியார் நகர் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் ஆற்று வெள்ளத்தில் இறங்கி, இருவரையும் பாதுகாப்பாக மீட்டார்.

இந்த நிலையில், ஆழியாறு தடுப்பணையில் ஆற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிக்கும் வீடியோ, வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...