கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 280- கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 280- கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியிலிருந்து பட்டணம் செல்லும் சாலையில் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, வருவாய் ஆய்வாளர் மகேஷ் குமார் ஆகியோர் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அதிகாரிகள் தடுக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் நிற்பதைக் கண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடியதாகத் தெரிகிறது.
பின்னர் இருசக்கர வாகனத்திலிருந்த மூட்டைகளைச் சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பதும், ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தப்படுவதும் தெரியவந்தது.
பின்னர் 280-கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து ரேஷன் அரிசி கடத்தி தலைமறைவான வாலிபரைத் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியிலிருந்து பட்டணம் செல்லும் சாலையில் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, வருவாய் ஆய்வாளர் மகேஷ் குமார் ஆகியோர் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அதிகாரிகள் தடுக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் நிற்பதைக் கண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடியதாகத் தெரிகிறது.
பின்னர் இருசக்கர வாகனத்திலிருந்த மூட்டைகளைச் சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பதும், ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தப்படுவதும் தெரியவந்தது.
பின்னர் 280-கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து ரேஷன் அரிசி கடத்தி தலைமறைவான வாலிபரைத் தேடி வருகின்றனர்.