கோவையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 280-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!!

கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 280- கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 280- கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியிலிருந்து பட்டணம் செல்லும் சாலையில் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, வருவாய் ஆய்வாளர் மகேஷ் குமார் ஆகியோர் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அதிகாரிகள் தடுக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் நிற்பதைக் கண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடியதாகத் தெரிகிறது.

பின்னர் இருசக்கர வாகனத்திலிருந்த மூட்டைகளைச் சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பதும், ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தப்படுவதும் தெரியவந்தது.

பின்னர் 280-கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து ரேஷன் அரிசி கடத்தி தலைமறைவான வாலிபரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...