கோவையில் ஓடும் பேருந்தில் 3-பெண்களிடம் கைவரிசை காட்டிய தீபாவளி திருடர்கள்.!!

ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி உட்பட 3-பேரிடம் 5-பவுன் நகை மற்றும் 12-ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி உட்பட 3-பேரிடம் 5-பவுன் நகை மற்றும் 12-ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை நகரில் கடந்த சில வாரங்களாக பேருந்தில் பயணம் செய்யும் மூதாட்டிகள், வேலைக்குச் செல்லும் பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் நகை மற்றும் கைப்பையை திடிவருகிறது.

பி.என்.பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், இவரது மனைவி சாந்தாமணி வயது 67, நேற்று இவர் பழையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்வதற்காக பேருந்தில் வந்தார்.

பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3-பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த சாந்தாமணி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் சொக்கலிங்கம் இவரது மனைவி சுபாஷினி வயது 55, நேற்று இவர் கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ் புரத்திற்கு வந்தார்.

பேருந்து சாய்பாபா காலனி அருகே வந்தபோது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சுபாஷினி வைத்து இருந்த கைப்பையைத் திருடி தப்பிச் சென்றனர். அந்த கைப்பையில் ரூபாய் 12 -ஆயிரம் பணம் இருந்தது.

இது குறித்து, அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி அவரது மனைவி கலைவாணி 56, நேற்று மாலை இவர் வெள்ளலூரிலிருந்து சிங்காநல்லூருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் கலைவாணி கழுத்திலிருந்த 2-பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் சென்றனர்.

இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த செயின் பறிப்பு சம்பவத்தால் பெண்கள் மூதாட்டிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமடைந்துள்ளனர்.

எனவே காவல்துறை ரோந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...