கோவையில் ஓடும் பேருந்தில் 3-பெண்களிடம் கைவரிசை காட்டிய தீபாவளி திருடர்கள்.!!

ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி உட்பட 3-பேரிடம் 5-பவுன் நகை மற்றும் 12-ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி உட்பட 3-பேரிடம் 5-பவுன் நகை மற்றும் 12-ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை நகரில் கடந்த சில வாரங்களாக பேருந்தில் பயணம் செய்யும் மூதாட்டிகள், வேலைக்குச் செல்லும் பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் நகை மற்றும் கைப்பையை திடிவருகிறது.

பி.என்.பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், இவரது மனைவி சாந்தாமணி வயது 67, நேற்று இவர் பழையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்வதற்காக பேருந்தில் வந்தார்.

பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3-பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த சாந்தாமணி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் சொக்கலிங்கம் இவரது மனைவி சுபாஷினி வயது 55, நேற்று இவர் கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ் புரத்திற்கு வந்தார்.

பேருந்து சாய்பாபா காலனி அருகே வந்தபோது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சுபாஷினி வைத்து இருந்த கைப்பையைத் திருடி தப்பிச் சென்றனர். அந்த கைப்பையில் ரூபாய் 12 -ஆயிரம் பணம் இருந்தது.

இது குறித்து, அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி அவரது மனைவி கலைவாணி 56, நேற்று மாலை இவர் வெள்ளலூரிலிருந்து சிங்காநல்லூருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் கலைவாணி கழுத்திலிருந்த 2-பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் சென்றனர்.

இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த செயின் பறிப்பு சம்பவத்தால் பெண்கள் மூதாட்டிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமடைந்துள்ளனர்.

எனவே காவல்துறை ரோந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...