ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே திருப்பூரில் இளைஞர் தற்கொலை.!!

திருப்பூரில், மனைவியுடன் தகராறு, கடன் தொல்லைகள் ஆகியவை காரணமாக மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஃபேஸ்புக் லைவ் வில் கூறிவிட்டு 27-வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில், மனைவியுடன் தகராறு, கடன் தொல்லைகள் ஆகியவை காரணமாக மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஃபேஸ்புக் லைவ் வில் கூறிவிட்டு 27-வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கும்பகோணம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் மணிகண்டன். அவரது 13-வது வயதில் திருப்பூருக்கு வந்துள்ளார். திருப்பூர் மாநகர் வெள்ளியங்காடு பகுதியில் சிலம்பம் மாஸ்டராக இருந்து வருகிறார்.

2-வருடங்களுக்கு முன்னதாக மாலினி என்பவருடன் மணிகண்டனுக்குத் திருமணம் ஆகி தாராபுரம் சாலை காட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்று இவரது மனைவி அனைத்து தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் மணிகண்டன் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மணிகண்டனிடம் காவல்துறையினர் பேசி, இன்று முதல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கவுன்சிலிங் போகுமாறு கூறியுள்ளனர். அதன்படி இன்று கவுன்சிலிங் செல்ல புறப்பட்ட போது அவரது மனைவியைப் போக சொல்லிவிட்டுத் தான் பின்னால் வருவதாகக் கூறி வீட்டிலேயே இருந்துள்ளார்.



இந்நிலையில் இன்று மதியம் ஃபேஸ்புக் லைவ் வில் வந்தவர், இதன்பிறகு என்னால் வாழமுடியாது அதனால் மன்னித்துவிடுங்கள் என்றும், மனைவி என்னுடன் இல்லை, கடன் தொல்லை அதிகமாகிவிட்டது.

நான் கேவலம் ஆனவனாக மாறிவிட்டேன். அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறிவிட்டு ஃபேஸ்புக் லைவ் விலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நல்லூர் காவல்துறையினர் தற்கொலை தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...