ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே திருப்பூரில் இளைஞர் தற்கொலை.!!

திருப்பூரில், மனைவியுடன் தகராறு, கடன் தொல்லைகள் ஆகியவை காரணமாக மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஃபேஸ்புக் லைவ் வில் கூறிவிட்டு 27-வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில், மனைவியுடன் தகராறு, கடன் தொல்லைகள் ஆகியவை காரணமாக மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஃபேஸ்புக் லைவ் வில் கூறிவிட்டு 27-வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கும்பகோணம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் மணிகண்டன். அவரது 13-வது வயதில் திருப்பூருக்கு வந்துள்ளார். திருப்பூர் மாநகர் வெள்ளியங்காடு பகுதியில் சிலம்பம் மாஸ்டராக இருந்து வருகிறார்.

2-வருடங்களுக்கு முன்னதாக மாலினி என்பவருடன் மணிகண்டனுக்குத் திருமணம் ஆகி தாராபுரம் சாலை காட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்று இவரது மனைவி அனைத்து தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் மணிகண்டன் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மணிகண்டனிடம் காவல்துறையினர் பேசி, இன்று முதல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கவுன்சிலிங் போகுமாறு கூறியுள்ளனர். அதன்படி இன்று கவுன்சிலிங் செல்ல புறப்பட்ட போது அவரது மனைவியைப் போக சொல்லிவிட்டுத் தான் பின்னால் வருவதாகக் கூறி வீட்டிலேயே இருந்துள்ளார்.



இந்நிலையில் இன்று மதியம் ஃபேஸ்புக் லைவ் வில் வந்தவர், இதன்பிறகு என்னால் வாழமுடியாது அதனால் மன்னித்துவிடுங்கள் என்றும், மனைவி என்னுடன் இல்லை, கடன் தொல்லை அதிகமாகிவிட்டது.

நான் கேவலம் ஆனவனாக மாறிவிட்டேன். அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறிவிட்டு ஃபேஸ்புக் லைவ் விலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நல்லூர் காவல்துறையினர் தற்கொலை தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...