சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.
கோவை: சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.
மக்களின கோரிக்கைகளைத் தெரிவிக்க வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள 72003-31442 இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் எனவும், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இடையர் வீதி பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:-
நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியில், ஒரு பகுதியாகக் கோவை தெற்குத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் குறைகளைக் கேட்கின்றேன். கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கின்றது.
மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. சாக்கடை கால்வாய்களைத் தூர்வார வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று இருக்கிறோம்.
தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒரு சில பணிகள் துவங்கி இருக்கிறது. அதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க சார்பில் கேரளாவிற்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு. அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை. ஆளுநர் மாநில அரசிடம் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்டு இருக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. உரிமை மீறல்கள் இல்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது. இது வழக்கமாக நடப்பது தான் எனப் பேட்டியளித்தார்.
மக்களின கோரிக்கைகளைத் தெரிவிக்க வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள 72003-31442 இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் எனவும், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இடையர் வீதி பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:-
நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியில், ஒரு பகுதியாகக் கோவை தெற்குத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் குறைகளைக் கேட்கின்றேன். கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கின்றது.
மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. சாக்கடை கால்வாய்களைத் தூர்வார வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று இருக்கிறோம்.
தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒரு சில பணிகள் துவங்கி இருக்கிறது. அதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க சார்பில் கேரளாவிற்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு. அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை. ஆளுநர் மாநில அரசிடம் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்டு இருக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. உரிமை மீறல்கள் இல்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது. இது வழக்கமாக நடப்பது தான் எனப் பேட்டியளித்தார்.