சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு- பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.!!

சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.


கோவை: சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.

மக்களின கோரிக்கைகளைத் தெரிவிக்க வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள 72003-31442 இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் எனவும், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இடையர் வீதி பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:-

நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியில், ஒரு பகுதியாகக் கோவை தெற்குத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் குறைகளைக் கேட்கின்றேன். கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கின்றது.

மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. சாக்கடை கால்வாய்களைத் தூர்வார வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று இருக்கிறோம்.

தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒரு சில பணிகள் துவங்கி இருக்கிறது. அதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க சார்பில் கேரளாவிற்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு. அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை. ஆளுநர் மாநில அரசிடம் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்டு இருக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. உரிமை மீறல்கள் இல்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது. இது வழக்கமாக நடப்பது தான் எனப் பேட்டியளித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...