சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு- பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.!!

சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.


கோவை: சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.

மக்களின கோரிக்கைகளைத் தெரிவிக்க வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள 72003-31442 இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் எனவும், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இடையர் வீதி பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:-

நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியில், ஒரு பகுதியாகக் கோவை தெற்குத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் குறைகளைக் கேட்கின்றேன். கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கின்றது.

மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. சாக்கடை கால்வாய்களைத் தூர்வார வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று இருக்கிறோம்.

தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒரு சில பணிகள் துவங்கி இருக்கிறது. அதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க சார்பில் கேரளாவிற்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு. அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை. ஆளுநர் மாநில அரசிடம் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்டு இருக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. உரிமை மீறல்கள் இல்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது. இது வழக்கமாக நடப்பது தான் எனப் பேட்டியளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...