தமிழக அரசின் மின் விளக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கோவை: தமிழக அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு சமீபகாலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை நிறுத்த வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். சமூக வளைதளங்களிலும் பொதுமக்கள் பலரும் நீட் தேர்வு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழக அரசின் மின் விளக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பிரதமரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
நீட் தேர்வு என்பது தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறுவது அப்பட்டமான பித்தலாட்டம் என்றும் காசு இருப்பவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு சட்டத்தை மறுக்கவோ, மறக்கவோ மத்திய அரசுக்கும் எந்த ஒரு உரிமையும் இல்லை என்றும் குடியரசுத் தலைவர் 7 தமிழர்கள் விடுதலையிலும் இதுவரை ஒப்புதல் தராமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிவித்தனர்.