தமிழக அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழக அரசின் மின் விளக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.



கோவை: தமிழக அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு சமீபகாலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை நிறுத்த வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். சமூக வளைதளங்களிலும் பொதுமக்கள் பலரும் நீட் தேர்வு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழக அரசின் மின் விளக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பிரதமரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



நீட் தேர்வு என்பது தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறுவது அப்பட்டமான பித்தலாட்டம் என்றும் காசு இருப்பவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடும் என்றும் தெரிவித்தனர்.



மேலும், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு சட்டத்தை மறுக்கவோ, மறக்கவோ மத்திய அரசுக்கும் எந்த ஒரு உரிமையும் இல்லை என்றும் குடியரசுத் தலைவர் 7 தமிழர்கள் விடுதலையிலும் இதுவரை ஒப்புதல் தராமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...