உடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்: கொரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவருக்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் அருள்ராஜ் கடந்த மாதம் 26ம் தேதி உடல்நலக் குறைவால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில், அவரின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர் அருள்ராஜ் பணியாற்றி வந்த புதுராமகிருஷ்ணபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கலந்து கொண்டு மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும் போது உடன் பணியாற்றிய செவிலியர்கள் கண்ணீர் சிந்தியபடியிருந்தது, மருத்துவர் அருள்ராஜின் அர்ப்பணிப்பான மருத்துவ சேவையை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்தது.
திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் அருள்ராஜ் கடந்த மாதம் 26ம் தேதி உடல்நலக் குறைவால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில், அவரின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர் அருள்ராஜ் பணியாற்றி வந்த புதுராமகிருஷ்ணபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கலந்து கொண்டு மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும் போது உடன் பணியாற்றிய செவிலியர்கள் கண்ணீர் சிந்தியபடியிருந்தது, மருத்துவர் அருள்ராஜின் அர்ப்பணிப்பான மருத்துவ சேவையை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்தது.